உலகம் பூராவும் மூன்று கோடிக்கு மேற்பட்ட மக்களால் ஜீவமந்திரமாக உச்சரிக்கப்பட்ட பெயர் சத்ய சாயி பாபா. ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த மக்கள்
சேவகராக உதவிகள் தேவைப்படுவோருக்கு அனைத்தையும் நிறைவேற்றித்தரும் ஒரு தனிமனித அரசாங்கமாக செயற்பட்டவர் பாபா. இன்று அவரின் உயிர் பிரிந்துள்ள நிலையில் இன, மத, ஜாதி பேதமின்றி கோடிக் கணக்கான மக்கள் கண்ணீர் வடித்து தம் ஆத்மாஞ்சலியை செலுத்துகின்றனர் என்றால் அதற்கு பாபாவின் மனுக்குலத்துக்கான தன்னலமற்ற சேவையைத்தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது. ஒரு ஆன்மீகவாதி என்பதற்கும் அப்பால் மக்கள் நலத்திட்டங்களே இந்த உலகின் உதாரண புருஷராக பாபாவை சகலரும் நேசிக்க, வழிபட வைத்தது.
பாபா வாயிலிருந்து லிங்கம் எடுத்துக்